×

திருப்போரூர் தொகுதியில் 12 பேர் மனுக்கள் ஏற்பு: 7 மனுக்கள் தள்ளுபடி

திருப்போரூர்.:  திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. தேர்தல் செலவினப் பார்வையாளர் பியூஷ் கத்தியார்,  திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து வேட்பாளர்களும் வரவழைக்கப்பட்டனர்.  19 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் முக்கிய வேட்பாளர்களான விடுதலை சிறுத்தைகள், பா.ம.க.,  அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மையம் ஆகிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலர் சுப்ரமணியன் அறிவித்தார்.

பா.ம.க. மாற்று, வி.சி.க. மாற்று, நாம் தமிழர் மாற்று, அ.ம.மு.க. மாற்று,  சிவசேனா ஆகிய வேட்பாளர்கள் உள்பட 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தார். அப்போது புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் பொன் பத்திர செல்வ சுதா எழுந்து தான் வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தார்.  அதற்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் திங்கட்கிழமைதான் மனுக்கள் வாபஸ் என்பதால் அதற்கான மனுவில் கையெழுத்திட்டு திங்கட்கிழமை வழங்குமாறு கூறினார்.




Tags : Thiruporur constituency , 12 petitions accepted in Thiruporur constituency: 7 petitions dismissed
× RELATED திருப்போரூர் தொகுதியில் 12 பேர் மனுக்கள் ஏற்பு: 7 மனுக்கள் தள்ளுபடி