சென்னை : உலக பெண்கள் அறக்கட்டளை சார்பாக நாளை வெற்றி மாரத்தான் 2021 நடைபெறுகிறது. இந்த மாரத்தான் போட்டிகள் காலை 07.30 மணியில் இருந்து 09.30 மணிவரை நீலாங்கரை பீச் சாலையில் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் தரப்படும் என உலக பெண்கள் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாரத்தான் போட்டிகளுடன் ரங்கோலி போட்டிகளும், வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், மலர் மருத்துவமனை சார்பில் டாக்டர் மகேஷ் குமார், யுனிவர்சல் வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் எலிசபெத் மற்றும் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.