×

அதிகரிக்கும் கொரோனா தொற்று!: தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை..!!

சென்னை: மாணவர்கள் நலன் கருதி வரும் 22ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற 22ம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியுள்ளதால் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Corona, Tamil Nadu, 22nd, 9th, 10th, 11th class, holiday
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...