×

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரும்பு கம்பிகள் தயாரிக்கும் ஆலையில் 250 தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvallur , Tiruvallur, Private Factory Employees, Corona
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...