×

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்காக 46 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் வேட்புமனுவில் பாகம் 19 பகுதி பி - காலம் 5ல் நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவினர் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அண்ணாமலை மற்றும் அவரது மாற்று வேட்பாளருடைய மனுக்களை நிறுத்திவைத்துள்ளனர்.

Tags : BJP ,Annamalai ,Aravakurichi , Annamalai
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி