குமரி: மீனவர் சமூதாயத்தை கடல் சார் பழங்குடியின மக்களாக அறிவிக்க திமுக நடவடிக்கை எடுக்கும் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்திலும், மழை காலத்திலும் வழங்கப்படும் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். கட்டுமர, நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.