×

மா.சுப்பிரமணியன் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக பொருளாளர் திமுகவில் இணைந்தார்

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று மேட்டுப்பாளையம் மார்க்கெட் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஜோதிராமலிங்கம் தெரு, நிவாசன் முதல் மற்றும் 2வது தெரு, வாழைத்தோப்பு கேஎல்எம் பிளாக், ஐஜேகே பிளாக், ஜோதிராமலிங்கம் தெரு, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய தெருக்களில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார். சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினரும் வட்ட செயலாளருமான வழக்கறிஞர் எம்.தரன்,

அவைத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன், வட்டச் செயலாளர் ந.தமிழரசு, பகுதி கழக நிர்வாகிகள் சி.பி.இறைவன், வி.பி.ஜானகிராமன், கவிராஜ், கவிதா கவுதமன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மா.சுப்பிரமணியன் நேற்று 140வது வார்டில் வாக்குசேகரித்த போது, தென்சென்னை மாவட்ட தேமுதிக பொருளாளர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு அக்கட்சியிலிருந்து விலகி மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


Tags : Ma Subramaniam ,DMK , Mr. Subramanian joined the DMK during the election campaign
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி