×

சிசிடிவி கேமரா துவக்க விழா

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் திருட்டு வழிப்பறி கொள்ளை, கொலை குற்ற செயல்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு காவல்துறை கோரிக்கை வைத்தனர். இதனை, ஏற்று அந்நிறுவனம்  சிசிடிவி கேமராக்களை நேற்று முன்தினம் வழங்கியது. அதனை முக்கிய சாலைகளில் பொறுத்தப்பட்டது. இதற்கான துவக்க விழா நேற்று காட்டூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆன் செய்து துவக்கி வைத்தார். அப்போது, நிறுவன அதிகாரிகள், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், காட்டூர் எஸ்ஐ விஷ்ணு உள்ளிட்ட போலீசார் மற்றும் ஏராளமான கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Launch , CCTV Camera Launch Ceremony
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!