×

மனு தாக்கல் செய்வதற்காக மயானத்தில் இருந்து கிளம்பிய மநீம வேட்பாளர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக ராசகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக மக்கள் மன்றம் என்ற அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர் ஆதரவற்று இறந்து போனவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராசகுமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, தனது முன்னோர்கள் மற்றும் ஆதரவற்று இறந்தவர்களின் ஆசியை பெறுவதற்காக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் உள்ள மயானத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்றார்.

அங்கு நினைவிடங்களில் மாலை போட்டு மரியாதை செலுத்தினார். இவருடன் தொண்டர்களும் கால்கடுக்க, முட்கள் நிறைந்த பாதையில் சிரமப்பட்டு வெயிலில் நடந்து சென்றனர். பின்னர் தேவகோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags : Mayan , Manima candidate who left the cemetery to file the petition
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...