×

வேட்டவலம் அண்ணா நகரில் கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேட்டவலம் : வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அண்ணா நகரில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்ததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதேபோல், அண்ணா நகர் பகுதிகளில் உள்ள பல தெருக்களில் முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படாமல் சாலையில் வழிந்தோடும் நிலை தான் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை  புகார் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் கடும் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் அண்ணா  நகர் பகுதி பொதுமக்களை உடனடியாக மீட்க, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vettavalam Anna Nagar , Vettavalam: Due to the construction of a canal to carry sewage from houses in the 4th Ward Anna Nagar under the Vettavalam Municipality.
× RELATED வேட்டவலம் அண்ணா நகரில் கால்வாய் வசதி...