×

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா வேட்பு மனு தாக்கல்: முக்கிய தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஹசன் மவுலானா நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து முக்கிய தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். வேளச்சேரி தெகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஹசன் மவுலானா போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையாறு துரை, திமுக பகுதி செயலாளர்கள் சேகர், துரை கபிலன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.  தொடர்ந்து அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் படும் வேதனைகள் குறித்து அவர் பொதுமக்களிடையே விளக்கி கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 மேலும் நான் வெற்றி பெற்றால் வேளச்சேரி தொகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணவும், குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்கப்படும், பூங்காங்களின் தரம் உயர்த்தப்படும். விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பிரச்சார பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.  அதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

Tags : Vilachcheri ,Hasan Moulana , Velachery constituency, Congress candidate, Hassan Maulana, nomination
× RELATED வேளச்சேரி தொகுதியில் கடந்த 21-ம் தேதி...