×

5 மணி நேரம் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பு மு.க.ஸ்டாலின் ஆட்சி வரப்போகிறது என்ற எழுச்சி மக்களிடம் உள்ளது: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா பேச்சு

சென்னை: சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கலைஞர் நகர் தெற்கு பகுதி 131வது வட்டத்தில் அமைந்துள்ள ராணி அண்ணா நகர் குடியிருப்பு, சிவலிங்கபுரம் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 5 மணி நேரம் நடந்தே சென்று மக்களிடம் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் வழி எல்லாம் மக்கள் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும் அவரை வரவேற்றனர். அப்போது, தலைவர் கலைஞர் அரசின் முந்தைய சாதனைகளையும், அதிமுக அரசின் வேதனைகளையும், திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்றும் திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பிரபாகர் ராஜா அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும். அவரது பிரநிதியாக பிரபாகர்ராஜா நிற்கிறார் என்று மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அதையும் தாண்டி இந்த பகுதி மக்களுக்கு நான் கொரோனா காலத்தில் பணி செய்ததை மகிழ்ச்சியுடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். இளம் வாக்காளர்கள், நாங்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்போம், என்று கூறி வருகிறார்கள். வழியெங்கும்  பொதுமக்கள் நாங்கள் இருக்கும் போது என்ன கவலை, தைரியமாக செல்லுங்கள் என்று சொல்கின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரப்போகிறது என்ற எழுச்சி மக்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், வாசுகி பாண்டியன், வட்ட செயலாளர் பூக்கடை பழனிச்சாமி, இரா.செழியன், செந்தில் குமார், அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : MK Stalin ,Virukambakkam ,DMK ,Prabhakar Raja , 5 p.m., ballot collection, MK Stalin's rule, Prabhakar Raja
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...