×

பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டி அதிமுகவில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராதது மனவேதனை: தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ பேட்டி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் நேற்று சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- அதிமுகவில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராதது மனவேதனை அளிக்கிறது. என்னால் பயன் பெற்றவர்கள் என்னை நினைக்காமல் போகலாம். ஆனால் மக்கள் என் பணியை பாராட்டுகிறார்கள். 10 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளேன். தொகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்துள்ளேன். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என கருதி சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.


Tags : AIADMK ,Perundurai ,Toppu Venkatachalam , Toppu Venkatachalam MLA's interview:
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...