×

திருவண்ணாமலை அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.66 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது, அவர் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராமசாமி என்பது தெரியவந்தது. மேலும், எடுத்துச் சென்ற பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனால், அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை கீழ பென்னாத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

Tags : Thiruvamalai , 1.66 lakh confiscated near Thiruvannamalai without proper documents
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும்...