அகமதாபாத்: அகமதாபாத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் நேற்று மட்டும் 1122 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5310 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.