கோவை : கோவை நவக்கரை அருகே ரயில் மோதி, படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள நவக்கரை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தண்டாவளத்தை கடக்க முயன்ற ஆண் காட்டுயானை மீது, அந்த வழியாக சென்ற சென்னை – திருவனந்தபுரம் விரைவு ரயில் மோதியது. ரயில் மோதியதில் யானையின் முதுகு மற்றும் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதால் யானையின் பின் பகுதியை அசைக்க முடியாமல் தவித்து வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர். எனினும் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.