சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக தலைமை தேர்தல் பணிமனை திறப்பு நேற்று நடந்தது. விழாவுக்கு விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தலைமை தாங்கினார். பணிமனையை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதில் தேர்தல் பொறுப்பாளர் ரங்கநாதன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், சைதை அன்பரசன், உ.துரைராஜ், வாசுகி தங்கராஜ், பகுதி செயலாளர் கே.கண்ணன் மற்றும் வட்ட செயலாளர், பி.எஸ்.முருகேசன், செந்தில்குமார், மு.அன்பழகன், லோகு, வீ.ஏ.ராஜா, கோவிந்தராஜ், பூக்கடை பழனிசாமி, செழியன், தஞ்சை பாபு, பழக்கடை பாஸ்கர் மைக்கல், காங்கிரஸ் சார்பில் கோபாலசுந்தரம், ஷெரிப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாக்கியம், சிபிஐ கருணாநிதி, ஏழுமலை, விசிக கரிகாழன், கட்டிடதொழிலாளர் அமைப்பு செல்வம்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பூவை முஸ்தபா, மமக ஜின்னா, ஹனிபா. பசும்பொன் தேவர் கழகம் வைரதேவர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சாலிகிராமம் சென்னை பெருநகர மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தொகுதி பொறுப்பாளர் ரங்கநாதன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். மாலை 131 வட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் பிரபாகர்ராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து “கொரோனா ஊரடங்கு நேரத்தில் உதவிய உங்களுக்கு தான் எங்கள் வாக்கு” என்று உறுதியளித்தனர்.