×

பணமூட்டையை நம்பி போட்டியிடும் அதிமுக: அம்பத்தூரில் டி.டி.வி.தினகரன் ஆவேசம்

சென்னை: அதிமுக பணமூட்டைகளையே நம்பிய போட்டியிடுவதாக அம்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன்  பேசினார். அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.வேதாச்சலத்தை ஆதரித்து, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அம்பத்தூர்  பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது, அமமுக கூட்டணி தொண்டர்களையும்,  நிர்வாகிகளையும், மக்களையும் நம்பிபோட்டியிடுகிறது. ஆனால் அதிமுக கூட்டணி மக்களை நம்புவது இல்லை நிர்வாகிகளையும், தொண்டர்களையும்  கூட நம்புவதில்லை. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி பண மூட்டைகளை மட்டுமே நம்பியே போட்டியிடுகிறது.

 ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர அதிமுக துடிக்கிறது. அமமுக தேர்தல் அறிக்கையில் 100 திட்டங்களை  அறிவித்து உள்ளது.  நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை அறிவித்துள்ள அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டை ஏமாற்ற  நினைப்போருக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.



Tags : AIADMK ,DTV ,Dinakaran , AIADMK to rely on money: TTV Dinakaran furious in Ambattur
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!