×

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக ‘ஆல்-அவுட்’ ஆகும்: கருணாஸ் அதிரடி பேட்டி

மேலூர்: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளபட்டி புதூரில் நேற்று முன்தினம் மந்தை திடலில் தேவர் சிலை நிறுவப்பட்டது.  போலீசார் அகற்ற முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 10 போலீசார் காயமடைந்தனர். இதுதொடர்பாக பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 15 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் அக்கிராமத்திற்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூற முயன்றார். அவரை ஊரின் எல்லையிலேயே போலீசார் தடுத்தனர்.

பின்னர் கருணாஸ் அளித்த பேட்டியில், ‘‘சமாதானமாக பேச வேண்டிய இடத்தில் எடப்பாடி அரசு, கிராம மக்களை தாக்கி சிறையில் அடைத்துள்ளது. சீர்மரபினருக்கு எதிரான இட ஒதுக்கீடு, ஜெயலலிதா அறிவித்த அரசாணையை அமல்படுத்தாதது என மாற்று ஜாதியினரை முக்குலத்தோருக்கு எதிராக இந்த அரசு திருப்ப பார்க்கிறது. இந்த தேர்தலில் எடப்பாடி அரசியல் அனாதையாக்கப்படுவார். போட்டியிடும் அனைத்து இடத்திலும் அதிமுக ‘‘ஆல் அவுட்’’ என்ற நிலையை முக்குலத்தோர் சமுதாயம் உருவாக்கும்’’ என்றார்.

Tags : All Volume, AIADMK, All-Out, Karunas
× RELATED சொல்லிட்டாங்க…