×

நேபாள பெண் சுட்டுக்கொலை

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். வடக்கு டெல்லி திமார்பூர் பகுதி புதிய அருணா நகரில் வசித்து வந்தவர் மீனா. நேபாள நாட்டை சேர்ந்தவர். இவரது கணவர் டெல்லியை சேர்ந்தவர். இவர்கள் அந்த பகுதியில் தின்பண்ட கடை வைத்து நடத்தி வந்தனர். வாடகை வீட்டில் வசித்து வரும் அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று காலை 7 மணி அளவில் அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர் கடையில் இருந்த மீனாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர். துப்பாக்கி குண்டு மீனாவின் மார்பில் பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதற்காக மீனா சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

Tags : Nepali woman shot dead
× RELATED போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை...