×

வண்டலூர் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்க தெற்கு ரயில்வேக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டலூர் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017ல் அளித்த மனு மீது ரயில்வே துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Southern Railway ,Vandalur Park , Vandalur Park, Railway Station, High Court, Order
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்