நத்தம்: வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டுவேலாம்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு தட்டில் பணம் போட்டதாக வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். தேர்தல் அதிகாரி புகாரின் பேரில் நத்தம் விஸ்வநாதன் மீது கிழ்நத்தம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.