புதுடெல்லி: கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி அடிப்படையில் சீட் ஒதுக்கப்படுகிறது. இங்கு கட்சி 2 கோஷ்டியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டிய மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி. சாக்கோ, கடந்த 10ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் பாஜ.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. அதை அவர் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இதனிடையே, அவர் தேசியவாத காங்கிரசில் இணையக்கூடும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்த பின் அளித்த பேட்டியின் போது, ``இன்று முறைப்படி சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறேன்,’’ என்று தெரிவித்தார். அதன்படி, மாலையில் அவர் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.