பட்ஜெட் மீது விவாதம் நடந்த போது பாஜ உறுப்பினர் அரக ஞானேந்திரா குறுக்கிட்டு சபாநாயகர் காகேரி கல்வித்துறை அமைச்சராக இருந்த போது நானும் ஒரு சிடி அளித்தேன் என்றார். ஞானேந்திரா இவ்வாறு கூறியதும் பேரவை சிறிது நேரம் கலகல என மாறியது. தொடர்ந்து அவர் பேசுகையில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் மிகவும் அதிகமாகும்.
மாஜி முதல்வர் குமாரசாமியின் பப்ளிக் பள்ளி திட்டம் மிகவும் சிறப்பானதாகும். ஒவ்வொரு கிராமத்திலும் அது போன்ற பள்ளிக்கூடம் அமைத்தால் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவர். ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்தால் போதும் தனியார் கல்வி நிலையங்களை விட அரசு பள்ளிக்கூடத்தின் தரம் உயர்ந்துவிடும் என்றார்.