×

குஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே 18ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்ட டவ்-தே புயல் கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 9 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறியது.
கோவாவின் பனாஜின் தென்மேற்கே 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் மராட்டியத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து குஜராத் கடற்கரையை அடையும் புயல் போர்பந்தர் – மஹூபா இடையே 18ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் எதிரொலியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள வாலியாதுரா கடற்கரை கிராமத்தில் பெரும்பாலான கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் கடற்சீற்றத்தால் சேதமடைந்துள்ளன. கடல் அரிப்பை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்காததால் புயலின் நேரத்தில் பாதிப்பிற்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்….

The post குஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dove- Tae ,Porbandar, Gujarat ,Weather Centre ,Chennai ,Dow-Te Storm ,Arab Sea ,Porbandar ,Gujarat ,Dow- De Storm ,Borbander, Gujarat ,Weather Center ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602...