×

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு நத்தம் விஸ்வநாதன் பணம் பட்டுவாடா

*நடவடிக்கை எடுக்க எதிர்கட்சியினர் வலியுறுத்தல்

நத்தம் : ஆரத்தி எடுத்த பெண்களுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பணம் பட்டுவாடா செய்த காட்சிகள் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை முளையூரில் உள்ள நல்லறவான் கோயிலில் சுவாமி கும்பிட்டு விட்டு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி தட்டு மற்றும் குடங்களுடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களுக்கு தட்டுகளில் பணம் விநியோகம் செய்யப்பட்டது.

சில இடங்களில் கட்சி நிர்வாகிகள் தட்டுகளில் பணம் விநியோகம் செய்வதும், ஒரு சிலருக்கு நத்தம் விஸ்வநாதனே தனது கையால் பணம் கொடுப்பதும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Natham Viswanathan ,Aarti , Natham: Former minister Natham Viswanathan's money laundering scandal
× RELATED மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்