ஜெயங்கொண்டம்: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கடந்த 2018ல் காலமானார். இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். மாவீரன் மஞ்சள் படை சார்பாக கனலரசன் ஐஜேகே கூட்டணியுடன் உடன்பாடு ஏற்படுத்தி ஜெயங்கொண்டம் தொகுதியில் தனது தாய் சொர்ணலதாவை நிற்க வைப்பதாக அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் பாமகவை எதிர்த்து சொர்ணலதா போட்டியிடுகிறார்.