×

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்..!

டெல்லி: பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரிஸ்கானுக்கு டெல்லி கீழ்கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் கடந்த மார்ச் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஆரிஸ்கான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி சந்தீப் யாதவ், தண்டனை விவரத்தை இன்று வெளியிட்டார். அதில், குற்றவாளி ஆரிஸ்கானுக்கு மரண தண்டனையும், ரூ. 11 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Tags : Batla ,House , Patla House Encounter case: Court sentences convict to death
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்