×

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி காட்டு யானை படுகாயம்

கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதியதில் படுகாயமடைந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ஆண் யானை ஒன்று நேற்றிரவு வாழையாறு ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி உள்ளது. நவக்கரை அருகே யானை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கோவையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ரயில் யானை மீது மோதியது.

இதில் யானையின் காலில் முறிவு ஏற்பட்டதோடு தலை மற்றும் இடுப்புப்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய யானைக்கு இரண்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நள்ளிரவு 1.30 மணிக்கு யானை விபத்தில் சிக்கியதாகவும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். காலில் முறிவு ஏற்பட்டிருப்பதால் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை தூக்கி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Wild Elephant Massacre ,Kovai Navakar , Elephant, train
× RELATED கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2...