×

துணை ராணுவம் கொடி அணி வகுப்பு

அண்ணாநகர்: சென்னையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில், சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம்  தேதி நடக்கிறது. இதனால்  தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துணை ராணுவம் ஒவ்வொரு தொகுதியிலும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களிடம் அச்சத்தை போக்கவும், பயமின்றி வாக்களிக்கவும் பல இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு  வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 10:30 மணியளவில் வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதியில் அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகர் தலைமையில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால் சுதாகர் மற்றும் இன்ஸ்பெக்டர் ரிஜிஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

Tags : Auxiliary Army Flag Team Class
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...