விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ரொட்டி பாக்கெட் ஏற்றி வந்த லாரியில் 8,900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாழங்காடு சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது புதுச்சேரியில் வந்த லாரியில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 8,900 மதுபாட்டில்களை கடத்தி வந்த ஓட்டுனர் சத்தியநாராயணன் கைது செய்யப்பட்டு, லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.