×

ஏடிஎஸ்பி திடீர் மரணம்

சென்னை: திண்டிவனம், இந்திரா நகரை சேர்ந்தவர் கண்ணப்பன் (58). இவர், வேலூரில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு விடுப்பில் சென்றார். மேலும் ஜனவரியில் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்னதாக சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.



Tags : ATSP sudden death
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...