அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவை கடைசி நேரத்தில், இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் கழற்றி விட்டதால், காதறுந்த பட்டமாக சுற்றித்திரிகிறது. ‘‘கடந்த எம்பி தேர்தலில் கூட நம்மள சுத்தி கூட்டணி பேச்சு நடந்துச்சு. நாம ஹீரோவாக இருந்தோம். இப்போது நம்மள ரோட்ல ஜோக்கரா சுத்த விட்டுட்டாங்களே’’ன்னு தேமுதிக நிர்வாகிகள் புலம்பித் தள்ளுகிறார்கள். ‘‘2011 தேர்தலில் நம்மள வைச்சுத்தான், அந்த அம்மா ஆட்சியையே பிடிச்சிது. இன்னைக்கு உங்க வாக்கு வங்கி என்னனு எங்களுக்கு தெரியாதா என்று இபிஎஸ் கேட்கிறாரு. அதுவும், ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கியை பொறுத்துதான் கூட்டணி பேச்சுவார்த்தையும், இடமும் ஒதுக்கி கொடுத்துசுச்சுனு ஓபனாக நேற்றைய தினம் சேலத்தில் இபிஎஸ் கூறியிருக்கார். அப்படினா, தமிழகத்தில் நோட்டாவிற்கு கீழ் வாக்குகள் வாங்கிய பாஜவுக்கு எந்த அடிப்படையில் 20 சீட் ஒதுக்கி கொடுத்தீங்க’’ன்னு தேமுதிக நிர்வாகிகள் கேள்வியை எழுப்பியிருக்காங்க.
தங்களோட ஊழல் புகார்கள், ஆதாரங்கள் எல்லாம் வசமாக சிக்கியதால், அதனை வெளியே விடாமல் இருக்க பாஜவுடன் எடப்பாடி கூட்டணி அமைச்சாரான்னு அதிரடியாக எதிர் கேள்வியை கேட்டு இருக்காங்க சேலத்தின் தேமுதிக நிர்வாகிகள். எப்படியோ இப்ப எங்கும் கூட்டணியில்லாமல், நமக்கு தேர்தல் களையிழந்த நிலையில நாம ஜோக்கராக இருக்கோம் என்றும் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.