×

ஸ்ரீகாளஹஸ்தியில் 8ம் நாள் பிரமோற்சவம்: சிம்ம வாகனத்தில் தாயார் வீதியுலா: இன்று கல்யாண உற்சவம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோல் பிரமோற்சவத்தின் 8ம் நாளான  நேற்று, சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் வீதியுலா வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 6ம் தேதி  முதல் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. வரும்  19ம் தேதி பிரமோற்சவம் நிறைவடைகிறது. பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்று  காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில்  ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தொடர்ந்து, நேற்று இரவு 10 மணியளவில் யானை  வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை  தாயாரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று அதிகாலை  திருக்கல்யாண உற்சவத்திற்காக மணக்கோல அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி  அம்மையார் ஊர்வலம் நடக்கிறது.


Tags : Srikalahasti ,Veediula ,Simma , 8th day celebration in Srikalahasti: Mother Veediula in Simma vehicle: Wedding celebration today
× RELATED ஸ்ரீகாளஹஸ்தியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்