×

ஐஎஸ்எல் கால்பந்து பைனல்: மும்பை சிட்டி-கொல்கத்தா இன்று இரவு பலப்பரீட்சை

கோவா: 11 அணிகள் பங்கேற்ற 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடந்து வந்தது. லீக்  சுற்று முடிவில் முதல் 4 இடம் பிடித்த மும்பை சிட்டி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் கோவா எப்சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் மும்பை சிட்டி- கோவா எப்சியும், கொல்கத்தா-கவுகாத்தி அணிகளும் மோதின. மும்பை அரை இறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) பெனால்டி ஷூட் அவுட் டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

கொல்கத்தா, அரை இறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது. கோவாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் பைனலில் கொல்கத்தா-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன. மும்பை 2 லீக் ஆட்டங்களிலும் கொல்கத்தாவை வீழ்த்தி உள்ளது. அந்த உற்சாகத்தில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம்காண்கிறது. மறுபுறம் கொல்கத்தா 4வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.

Tags : ISL Football Final ,Mumbai City ,Kolkata , ISL Football Final: Mumbai City-Kolkata tonight
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்