தேக்கம்பட்டி: தேக்கம்பட்டியில் தமிழக அரசு நடத்தி வரும் புத்துணர்வு முகாமில் பல யானைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக யானைகளின் உடல்களில் வேனற் கொப்பளங்கள், தோலில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிக வெப்ப நிலை காரணமாக மிகக்குறைந்த அளவே உணவுகளை யானைகள் உட்கொள்வதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.