×

நொளம்பூரில் நண்பரை கொன்ற 2 பேருக்கு குண்டாஸ்

அண்ணாநகர்: நொளம்பூரில் நண்பரை கொலை செய்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை நொளம்பூர், வாவின் ரோடு, மங்கள ஏரி பார்க்கில் கடந்த மாதம் 5ம் தேதி இரவு 3 நண்பர்கள் மது அருந்தினர். போதை அதிகமானதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேர், மற்றொரு நண்பரை சரமாரியாக கற்களால் தாக்கினர். மயங்கி விழுந்த அவரை சாலையோரமாக எடுத்து சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று விட்டு 2 பேரும் தப்பினர். புகாரின்பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மறுநாள் காலை ரோந்து பணியின்போது அதே பகுதியில் சந்தேக நிலையில் சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

அவர்கள் நொளம்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (33), பாஸ்கர் (எ) பாம்பு பாஸ்கர் (44) என தெரியவந்தது. இருவரும் நொளம்பூர் பகுதியில் குப்பை சேகரிப்பவர்கள். இவர்கள்தான், ெநாளம்பூர் பகுதியை சேர்ந்த எலி (எ) சிவகுமார் (35) என்பவருடன் சேர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தகாத வார்த்தையால் இருவரையும் சிவகுமார் பேசியுள்ளார். ஆத்திரத்தில் இருவரும், பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து விஷ்ணு, பாம்பு பாஸ்கர் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : Nolambur , Kundas for 2 people who killed a friend in Nolambur
× RELATED சென்னை நொளம்பூரில் புல்லட் மோதியதில்...