×

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத கழிவறை-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சீர்காழி : சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டத்தின்கீழ் 2013- 2014ம் ஆண்டு ரூ.16 லட்சம் செலவில் கழிவறை கட்டப்பட்டது. இதை பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறையை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. எனவே போதிய பராமரிப்பு செய்து கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sirkazhi , Sirkazhi: Passengers are suffering due to non-availability of toilets at the new bus stand in Sirkazhi.
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்