×

வீரவநல்லூரில் பறக்கும்படை அதிரடி 65 செல்போன், 50 பேட்டரிகள் பறிமுதல்

வீரவநல்லூர் : பாளை. -அம்பை நெடுஞ்சாலையில் வீரவநல்லூர் கோமதி மில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை அதிகாரி சங்கரகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழையபேட்டையில் இருந்து அம்பை நோக்கி சென்ற டூவிலரை மறித்து சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணங்கள் இன்றி 65 பழைய செல்போன்கள் மற்றும் 50 பேட்டரிகள் கொண்டு செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும் படையினர் செல்போன் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்து சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரனையில் செல்போன் கொண்டு சென்றது பழையபேட்டை, விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன்(34) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Air Force ,Weerawanallur , Weerawanallur: Palai. -Election Flying Squadron Officer Sankarakumar near Veeravanallur Gomati Mill on Ambai Highway last evening
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...