சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.