×

சபரிமலை ஐயப்பன் கோயிலில்தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: பங்குனி   மாத பூஜைகள் மற்றும் ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் 28ம் தேதி வரை கோயில் நடை  திறந்திருக்கும். இதில் தினமும் 5,000 பக்தர்கள்  தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதற்கான ஆன்ைலன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்து விட்டது. இந்த நிலையில் சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Sabarimala Iyappan Temple , Sabarimala Iyappan Temple is open to 10,000 devotees daily
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...