×

தேர்தல் மன்னன் பத்மராஜன்..! 215வது முறையாக மனு தாக்கல்

மேட்டூர்: மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன் (62). இவர், பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி 215வது முறையாக மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

8ம் வகுப்பு வரை படித்த இவர் கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர், 1988ம் ஆண்டு தனது வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு வாங்குவதற்காக மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன் பிறகு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார். முக்கிய தலைவர்கள், முதல்வர், பிரதமர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளை குறி வைத்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். மேலும், டெபாசிட் கட்ட பணம் இல்லா விட்டாலும் மனைவியின் நகைகளை அடகு வைத்து டெபாசிட் கட்டி மனு தாக்கல் செய்து வருகிறார்.

Tags : Padmarajan , Election king Padmarajan ..! Petition filed for the 215th time
× RELATED இது எனது 240வது சந்தோஷமான தோல்வி: தேர்தல் மன்னன் லகலக