சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எழும்பூர் தனித் தொகுதியை கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.