×

ஜெயலலிதா உற்சவர் என்றால் சசிகலா தான் மூலவர்.. 38 ஆண்டு காலம் கழகத்தை இயக்கியவர் சின்னம்மா : அமமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ பேட்டி

சென்னை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வியடைவார் என்று அமமுகவில் இணைந்த சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் இடம்பெறவில்லை. அதில் ஒருவர் தான் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன்.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதலில் ஈடுபட்டு வந்த ராஜவர்மன், தினகரனை சந்தித்தது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், டிடிவி தினகரன் முன்னிலையில் ராஜவர்மன் அமமுகவில் இணைந்து கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை உழைப்பவர்களை வேட்பாளராக நிறுத்த வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை. சசிகலாவுக்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதில் அளிப்பார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வர் துணை முதல்வரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.முதல்வர், துணை முதல்வரிடம் பொய்யான தகவல்களைக் கூறி சீட் பெற்றுள்ளார் ராஜேந்திர பாலாஜி. அதிமுகவில் இருந்துகொண்டே அவர் பிற கட்சிகளுக்கு வேலை பார்க்கிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வியடைவார். எனக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தார் ராஜேந்திர பாலாஜி.வெற்றி வாய்ப்புள்ள யாருக்கும் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை. அதிமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் புறக்கணிப்பு.ஆண்டவனாலும் இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது,என்றார். அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jayalalithaa ,Sasikala , ராஜேந்திரபாலாஜி
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...