திருத்தணி: திருத்தணி சரஸ்வதி மில் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் டெம்போவில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.29 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் பணம் எடுத்து வந்த 12 பேரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.