சென்னை : சட்டமன்ற தேர்தல் தொகுதிப்பங்கீட்டில் பாமகவுக்கு பூந்தமல்லி தொகுதியை ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல் செய்து வருகின்றனர்.நசரத்பேட்டை சாலையின் சிக்னல் அருகே அதிமுகவினர் திரண்டு வந்து மறியல் செய்து வருகின்றனர். அதிமுகவினரின் சாலைமறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.