×

பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கீடு: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம்

சென்னை: அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு எழும்பூர் தொகுதியும், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதை தொடர்ந்து அந்த கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அந்த கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய அதிமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எழும்பூர் (தனி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக கழக தலைவர் ஜான்பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

Tags : Perambur ,Grand Leader People's Party Egmore ,Janpandian party ,AIADMK , Perambur constituency for Perunthalaivar People's Party Egmore constituency allotment to Janpandian party in AIADMK alliance: Agreement to contest under double leaf symbol
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது