×

பந்தலூர் அருகே நீரோடை தூர்வாரும் பணி தீவிரம்

பந்தலூர்: பந்தலூர் நெல்லியாளம் வாளவயல் பகுதியில் நீரோடை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பந்தலூர் அருகே நெல்லியாளம் வாளவயல் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி வழியாக ஓடும்  நீரோடை பொன்னானி ஆற்றில் கலக்கிறது. மழை காலங்களில் வாளவயல் பகுதியில்  நீரோடையில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்குவதால் அப்பகுதி மக்கள்  நீரோடையை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், வேளாண் பொறியியல் துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது நெல்லியாளம் வாளவயல் பகுதியில் பொக்லைன் மூலம்  நீரோடையை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

மேலும், நீரோடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும்  பணி நடக்கிறது. கோடை காலங்களில் நீரோடையில் குறுக்கே அமைக்கும் தடுப்பணை மூலம் தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இடையூறு இல்லாமல் நீரோடையை தூர்வாரி தடுப்பணை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pandharpur , Intensification of dredging work near Pandharpur
× RELATED பந்தலூர் பஜாரில் சாலையில்...