காரியாபட்டி: காரியாபட்டி அருகே 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்தினர் வெற்றிை, பாக்குடன் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து அசத்தினர். காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை வகித்து பேரணயை துவக்கி வைத்தார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, ஊராட்சி செயலர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். ஊராட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று ஏப்.6ம் தேதியன்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனைவரும் வர வேண்டும் எனக்கூறி வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.