புதுடெல்லி: மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி மக்களவையில் நேற்று அளித்த பதிலில், ‘பாதுகாப்பு அச்சுறுத்தலின் அடிப்படையில் நாடு முழுவதும் விஐபி.க்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் பாதுகாப்பு அவ்வபோது மறுஆய்வு செய்யப்படுகிறது. தற்போது, 230 விஐபி.க்களுக்கு மத்திய அரசின் இசட் பிளஸ், இசட், ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-2020ம் ஆண்டு கால கட்டத்தில் 635 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார்.